தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த வகையில் 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை தாக்கம் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்பு கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒமைக்ரான் பரவல் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு முதல் கட்ட தேர்வு கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது.
இன்று முதல் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
மேலும் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியுடன் முடிகிறது. அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அந்த அட்டவணையின்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே 6 தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும்,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் மே மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே மாதம் 13ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இதன் பின் 2022-2023 ஆம் ஆண்டு கல்வி வரும் ஜூன் மாதம் 13ம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி வகுப்புகள் தொடங்கும். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.