TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வுக்கு தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக போலீஸ் தேர்வுக்கு ஏராளமானோர் தயார் ஆகி வருகின்றனர், அவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் என்ன? தேர்வு முறை எப்படி? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
TNUSRB-PC தேர்வு:
தமிழ்நாடு காவல் துறை, சிறை & சீர்த்திருத்ததுறை மற்றும் தீயணைப்பு & மீட்புப்பணிகள் துறைகளில் மொத்தம் 3,552 காலியிடங்கள் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது துறை வாரியாக பார்த்தால் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) பிரிவில் 1,526 ஆண்கள், 654 பெண்கள் என 2,180 இடமும், இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பிரிவில் ஆண்கள் மட்டும் 1,091 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் சிறை மற்றும் சீர்த்திருத்த துறையில் இரண்டாம் நிலை சிறைக்காவல் பணிக்கு 153 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 161 பேரும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 120 பணியிடம்(ஆண்கள்) நிரப்பப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 40% மதிப்பெண்கள் எடுப்பது அவசியம். இல்லையென்றால், முதன்மை தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இந்த பகுதி 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய உணவகங்களில் சேவை கட்டணம் – டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
தமிழ் மொழி தகுதித் தேர்வு:
- இலக்கணம் : எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு
- இலக்கியம் : திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவை
- தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும் : தமிழ் அறிஞர்கள், தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு, உரைநடை, தமிழ் தொண்டு, சமுதாயத் தொண்டு
முதன்மை எழுத்துத் தேர்வு
- இரண்டாம் பகுதியாக முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் பெறக் கூடிய மதிப்பெண்கள் அடிப்படையில் தான் அடுத்த செயல்முறைக்கு தகுதி செய்யப்படுவார்கள். இது 70 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
- இதில் பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும்.
- பொது அறிவு: இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் இடம்பெறும்.
- உளவியல்: தொடர்பு அல்லது தொடர்பு கொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
- கணிதம் : சுருக்குக, மீ.பெ.வ & மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம் & நட்டம், நேரம் & வேலை, சங்கிலி தொடர், குழாய் & தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு ஆகியவை கணிதப் பகுதியில் கேட்கப்படும் முக்கிய தலைப்புகள் ஆகும்.
தேர்வுக்கு தயாராவது எப்படி:
- இவற்றில், தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும்.
- புக் பேக் கொஸ்டின் மற்றும் அடைப்புக்குள் உள்ள தகவல்களையும் நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். இப்படி தயார் ஆனால் நிச்சயம் தேர்வில் வெற்றி பெறலாம்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்