இந்திய உணவகங்களில் சேவை கட்டணம் – டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
இந்தியாவில் இயங்கும் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய அரசு அண்மையில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இந்த உத்தரவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது.
சேவை கட்டணம்:
இந்தியாவில் அனைத்து பொருட்களுக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு இந்த GST வரி முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பொருட்கள் விற்பனைக்கும் ஒரே விதமான வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தில் ஜிஎஸ்டி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்து பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர். இந்த GST வரிக்கு மத்தியில் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் சேவை கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததை அடுத்து நாட்டில் இயங்கும் தங்கும் விடுதிகள் அல்லது உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டாயமாக சேவை கட்டணம் வசூலிக்க கூடாது. அது வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு உட்பட்டது. அதனால் சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் சேவை கட்டணம் அளிப்பது நுகர்வோரின் விருப்பப்படி என்பதை ஹோட்டல்கள் உணவகங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியது. அதனை தொடர்ந்து உணவகங்கள் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மத்திய அரசு தடை விதித்தது.
தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
இதனை மீறி உணவகங்கள் சேவை கட்டணம் வசூலித்தால் வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் உதவி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வை கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அடுத்த கட்ட விசாரணை நடந்து முடிந்த பிறகு சேவை கட்டணம் வசூலிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.