தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

0
தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
தமிழகத்தில் உயரும் மின் கட்டணம் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27 முதல் ரூ.565 வரை மின் கட்டணம் உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த மின்சார கட்டணம் எப்படி, எவ்வாறு உயர்த்தப்படவுள்ளது என்பதன் முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

உயரும் மின் கட்டணம்:

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது 100 யூனிட் வரை கட்டணத்தில் மாற்றமில்லை, 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டணம் உயர்கிறது. முதல் 100 யூனிட் வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம். மேலும் விசைத்தறிகளுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின்‌ மின்‌ அமைச்சகத்தின்‌ அறிவிக்கையின்‌ படி 10 சதவீதம்‌ வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனால்‌, மின்சாரத்தின்‌ சராசரி விலை அதிகரித்து மின்‌ வழங்கல்‌ விலை மற்றும்‌ சராசரி வருவாய்த்‌தேவைக்கான இடைவெளி அதிகரித்துள்ளது. மேலும்‌, கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு மின்‌ மிகை மாநிலம்‌ என அறிவித்த போதிலும்‌, மூன்றில்‌ இரண்டு பங்கு மின்சாரம்‌ அதிக விலைக்கு கடந்த காலத்தில்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டது. எனவே, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்திற்கு மின்‌ கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப்‌ பிறகு உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.

  • தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம் ) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை.
  • அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலை இல்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தேர்தல் வாக்குறுதி நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் 2.37 கோடி வீட்டு மின் நுகர்வோர்கள் பயன் அடைவார்கள்
  • குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு முதலியவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • 2 மாதங்களுக்கு 101-200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.27.50 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.72.50 உயர்த்த பரிசீலனை

TN TET ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்வர்களின் கவனத்திற்கு!

  • 2 மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.297.50 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 600 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.155 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 700 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.395 உயர்த்த பரிசீலனை
  • 2 மாதங்களுக்கு 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.565 உயர்த்த பரிசீலனை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!