தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என பாஜக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
மறுவாக்குப்பதிவு
தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 19) மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் வாக்குபதிவில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். அதாவது தென் சென்னைக்கு உட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 8,304 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – அரசு ஏற்பாடு!
அதாவது பூத் ஏஜென்ட்டை வெளியே அனுப்பிவிட்டு கள்ள ஓட்டு போட்டு இருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். அது மட்டுமில்லாமல் வாக்காளர் பட்டியலில் குளறுபடி நடைபெற்று இருப்பதாகவும், அதை தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் வெள்ளிக்கிழமை தேர்தல் வைத்ததால், மக்கள் விடுமுறையாக நினைத்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் வெள்ளிக்கிழமை தேர்தல் வைப்பதை தவிர்த்ததால் வாக்கு சதவீதம் குறையாமல் தடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.