திடீரென்று அதிக அளவில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருவதை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல்:
நாட்டிலேயே பறவை காய்ச்சல் நோய் அதிக அளவில் கேரள மாநிலத்தில் அடிக்கடி பரவி வருகிறது. தமிழகத்திற்கு அண்டை மாநிலமாக உள்ளதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு எளிதாக நோய் தாக்கம் பரவி விடும் அபாயம் உள்ளது. அதேபோல் தற்போது கேரளாவில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக செய்திகள் வெளியானது.
Follow our Instagram for more Latest Updates
இதனை அடுத்து தமிழக கேரளா எல்லையான கோவை, வலையார் போன்ற பகுதிகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் தீவிர சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கேரளாவில் இருந்து வரும் முட்டை மற்றும் கோழி இறைச்சி வாகனங்களை கிருமி நாசினி தெளித்து தீவிர சோதனை நடத்திய பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
தமிழகத்தில் 8,304 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – அரசு ஏற்பாடு!