RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

0
RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை புதிய விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த உள்ளது.

மாணவர் சேர்க்கை:

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும் தரமான கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே பள்ளிகளுக்கு செலுத்தி விடும். 2024 – 25ஆம் கல்வி ஆண்டு தொடங்க உள்ள நிலையில் தற்போது ஆர் டி இ திட்டத்தின் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

நெருங்கியாச்சு குரூப் 4 தேர்வு – பாஸ் பண்ணனுமா “இத” கண்டிப்பா பண்ணுங்க!

தற்போது பள்ளிக் கல்வித் துறை ஆனது இத்திட்டத்திற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் அந்த மாணவருக்கு அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்டிஈ இட ஒதுக்கீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும், இந்த சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அதிகளவு தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!