TCS, Infosys, HCL நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தொடரும் Work From Home முறை!
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவுதலின் வீதம் அதிகரித்து வருவதால் TCS, Infosys, HCL போன்ற ஐடி நிறுவனங்கள் Work From Home முறையையே தொடர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஐடி நிறுவனம்:
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவலின் வீதம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. நாள் ஒன்றிற்கு மட்டுமே ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கூடிய விரைவில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளும் உள்ளன. இந்தநிலையில், ஊழியர்களை மறுபடியும் அலுவலகத்திற்கு அழைப்பது என்பது முடியாத காரியமாகும். மேலும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் டெக் போன்ற நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் ஊழியர்களில் மூத்த ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.
Exams Daily Mobile App Download
மீதமுள்ள ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தான் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே, இந்த ஆண்டின் இறுதிக்குள் பாதியளவு ஊழியர்களை அலுவலகங்களுக்கு வரவழைக்கும் பணியில் ஐடி நிறுவனங்கள் தயார் நிலையில் இருந்தன. ஆனால், இந்த சமயத்தில் கொரோனா பரவலும் அதிகரித்து வருவதால் Work From Home முறையினையே தொடரலாம் என டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் டெக் போன்ற ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் Test Series!
மேலும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் தனது ஊழியர்களை ஹைப்ரிட் மாடலில் பணிபுரிய அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. மேலும், எதிர்காலம் மற்றும் பாதையை உடைக்கும் 25 /25 மாடல் ஏற்றுக்கொள்வதற்கும் கைகளை அறிமுகப்படுத்துவதற்கு ஐடி நிறுவனங்கள் உறுதியாக இருக்கிறது. மேலும், பலரும் வீட்டில் இருந்தே வேலை செய்வதை தான் விரும்புகின்றனர். அதாவது, வீட்டிலிருந்து வேலை செய்யும் போது தான் நேரமும், பணமும் மிச்சமடைவதாக ஊழியர்கள் எண்ணுகின்றனர். ஊழியர்களின் விருப்பப்படியே Work From Home முறையை தொடர ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.