தனம் வீட்டில் சமைக்காததால் மிகவும் கஷ்டப்படும் கண்ணன் – ப்ரோமோ ரிலீஸ்!
மூர்த்தியை மருத்துவர்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறியதால் தனம் தான் கடையை பார்த்து கொள்கிறார். இதனால், தனத்தின் சாப்பாட்டை சாப்பிட முடியாமல் கண்ணன் தவிக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது தான் மூர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். ஆனால், கதிரும் முல்லையும் வீட்டிற்கு வந்துவிட்டால் மூர்த்தி மொத்தமாகவே குணமாகிவிடுவார். ஆனால், அது தெரிந்தும் கதிர் தான் வீம்பு பிடிவாதம் பிடித்துக்கொண்டு முல்லையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். எந்த வேலையும் கிடைக்காமல் தற்போது ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். அதாவது, எவ்வளவு கஷ்டப்பட்டாவது கண்டிப்பாக 5 லட்ச ரூபாய் கடனை அடைத்தே தீருவேன் என கதிர் பிடிவாதமாக இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால், முல்லைக்கும் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், கதிரை மீறி எதுவும் செய்ய முடியாது என்பதால் அமைதியாக இருக்கிறார். இதனையடுத்து, கதிரும் வீட்டில் இல்லை என்பதால் சூப்பர் மார்க்கெட்டை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் தனம் தான் தற்போது சூப்பர் மார்க்கெட்டை கவனித்து கொள்கிறார். இதனால், வீட்டில் மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தான் சமைக்கிறார்கள். ஏற்கனவே, ஐஸ்வர்யாவும் மீனாவும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.
இருந்தாலும் இருவரும் ஒன்றாக தான் சேர்ந்து சமைக்க வேண்டும் என்பதால் எப்படியோ முட்டி மோதி கஷ்டப்பட்டு உப்புமாவை சமைக்கிறார்கள். அப்போது கண்ணன் எப்போதும் போல ஆசையாக சாப்பிட அமருகிறார். அப்போது உப்புமாவை பார்த்ததும் கண்ணனின் முகமே மாறி போகிறது. பின்பு, அனைவரும் வழக்கம் போல கிண்டல் செய்கிறார்கள். என்ன தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கஷ்டம் இருந்தாலும் பாசத்திற்கு பஞ்சமே இல்லை. இந்த நேரத்தில் கதிரும் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் கதிரும் முல்லையும் குடும்பத்தினருடன் ஒன்று சேருவார்கள் என காத்துக் கொண்டிருக்கின்றனர்.