ராதிகாவின் மீது புகார் கொடுக்கும் பாக்கியா, அதிர்ந்து போகும் கோபி – திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!
இத்தனை நாட்களாக பாக்கியாவிற்கு தெரியாமல் ராதிகாவை சந்தித்து கோபி காதலை வளர்த்துவந்தார். மனைவி இருக்கும் போதே ராதிகா கோபியை திருமணம் செய்துகொள்ள நினைத்ததால் ராதிகா மீது பாக்கியா புகார் கொடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் மொத்த சுயரூபமும் தற்போது வெளியே வந்துவிட்டது. மேலும், மொத்த குடும்பமும் கோபியை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். எந்த அளவுக்கு கோபி மீது நம்பிக்கை வைத்திருந்தார்களோ அதை விட அதிகமாக வெறுக்கவும் ஆரம்பித்துவிட்டனர். இதற்கு பிறகு கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறாரா அல்லது குடும்பம் கஷ்டப்படுவதை பார்த்து ராதிகாவை விட்டு விலக போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
ஆரம்பத்தில் ஈஸ்வரி மற்றும் இனியா யாருமே பாக்கியா கூறியதை நம்பவில்லை. கண்டிப்பாக கோபி இப்படி செய்யவே மாட்டார் என நம்பிக் கொண்டிருந்தார்கள். பின்பு, தான் செழியனும் ஈஸ்வரியிடம் இது பற்றி கூறுகிறார். அப்பா ரொம்ப நாட்களாகவே இது மாதிரி செய்து கொண்டிருக்கிறார். அம்மாவுக்கு தெரிந்தால் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதனால் தான் யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்தேன். மேலும், இது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக தான் அப்பாவிடம் அப்பொழுதே எடுத்து கூறினேன். ஆனால், அப்பா எதையும் கேட்க தயாராக இல்லை என கூறுகிறார்.
வீட்டை விட்டு வெளியேறி பாக்கியா எடுக்க போகும் அதிரடி முடிவு – “பாக்கியலட்சுமி” ஷாக் ட்விஸ்ட்!
இதற்கு பிறகு தான் கோபியை பற்றி மொத்தமாக குடும்பத்தினர்கள் புரிந்து கொள்கின்றனர். பின்பு, கோபியிடம் பாக்கியா இத்தனை நாட்களாக உங்களுக்கு பிடிக்காமல் உங்களுடனே இருந்தேன். ஆனால், தற்போது முதன் முறையாக உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்யப் போகிறேன் என சொல்லிவிட்டு வீட்டை விட்டே வெளியேறுகிறார். பின்பு, நேராக காவல் நிலையத்திற்கு சென்று ராதிகா மீது பாக்கியா புகார் கொடுக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. ராதிகாவை தான் கோபி திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.