PAN Card வைத்திருப்போர் கவனத்திற்கு – தவறாமல் படிங்க!
இந்தியாவில் தற்போது ஆதார் கார்டை போன்று பான் கார்டும் ஒரு முக்கிய ஆவணமாக மாறி விட்டது. இந்நிலையில் பான் கார்டை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதா அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க எளிய வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பான் கார்டு:
இந்தியாவை பொறுத்த வரை இன்றைக்கு இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றான பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அல்லது நிரந்தர கணக்கு எண் மிகவும் அவசியமான ஆவணமாகும். இது 10 இலக்க எண்ணெழுத்து அடங்கிய பான் எண்ணுடன் வருகிறது. அதைப் பயன்படுத்தாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாது.
தமிழக குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மேலும் அதனை தொடர்ந்து தங்களின் முழு விவரமும் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் முகவரி, மொபைல் எண், வங்கி கணக்கு எண் மற்றும் தங்கள் நிறுவனம் பற்றிய தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே பான் கார்டு தவறான நபரின் கைகளுக்குச் சென்றால், அவர்கள் மேற்கண்ட விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம், இது தொடர்ச்சியான மோசடிகளுக்கு வழிவகுக்கும். அடுத்தாக, பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது என்று இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளவோம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் புதிய ஃபார்முலாவுடன் DA? கணக்கீடு மாற்றம் & சம்பள விவரம் இதோ!
CIBIL, Equifax, Experian அல்லது CRIF உயர் மதிப்பெண் மூலம் கடனின் நிலையைக் கண்காணிக்கவும், ஏதேனும் கடன் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். உங்கள் கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ (இந்தியா) லிமிடெட் (CIBIL) மதிப்பெண்ணை அவ்வப்போது சரிபார்க்கவும். உங்கள் CIBIL போர்ட்டலில் தவறான பதிவு இருந்தால், மோசடிக்கு ஆளாகியிருக்கலாம், மேலும் விரைவாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மோசடி குறித்து தெரிவிக்கவும். பான் அட்டைதாரர்கள் நிதி அறிக்கைகளை சரிபார்க்க Paytm அல்லது பேங்க் பஜார் இணையதளங்களுக்கு செல்லலாம்.