தமிழக குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இதில் Counselor, Social Worker பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 12.04.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் சமீபத்தில் Counselor மற்றும் Social Worker பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் Graduation, Post Graduation, PG Diploma முடித்தவராக இருக்க வேண்டும். Counselor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குழந்தைகள் ஆற்றுப்படுத்துதலில் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருப்பது அவசியம் ஆகும்.
Social Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளில் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருப்பது அவசியம் ஆகும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும். இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.14,000/- மாத ஊதியமாக பெறுவார்கள். விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து District Child Protection Officer, District Child Protection Unit, No.78/A, 78/A, Near Elango Thirumana Mandapam, Mohanur Road, Namakkal-637 001 என்கிற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.