மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தேசிய பென்ஷன் திட்டத்தில் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் இனிமேல் அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை. மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை இணைத்து கணக்கு தொடங்கலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
புதிய வசதி அறிமுகம்:
அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமைக் காலத்தில் பயன்பெறும் நோக்குடன் இந்திய அரசால் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பென்சன் திட்டமாக வளர்ந்துள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்தில் 18 முதல் 70 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்யலாம். பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தால் தேசிய ஓய்வூதிய திட்டம் நிர்வகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் பென்ஷன் பலன்கள் கிடைப்பது ஒருபுறம் இருக்க, வரிச் சலுகைகளும் கிடைக்கின்றன. இதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மே 2 முதல் ஜூன் 15 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் வட்டித்தொகை, மெச்சூரிட்டி தொகை, மொத்த பென்ஷன் தொகை ஆகியவற்றுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிடுவோருக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் ஒரு அட்டகாசமான தேர்வு ஆகும். இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோர் இனிமேல் அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை இணைத்து கணக்கு தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குவோர் இதுவரை நேரில் சென்று தான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கணக்கு தொடங்க வேண்டியது இருந்தது.
ஆனால் 2022 ஏப்ரல் 26ம் தேதி முதல் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அஞ்சல் துறை அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையின் இணையதளத்துக்குச் சென்று, அதில் நேஷனல் பென்ஷன் சிஸ்டம்-ஆன்லைன் சர்வீஸ் (National Pension System-Online Services) என்ற மெனுவை க்ளிக் செய்து அதில் சேர முடியும். இந்த தளத்தில் புதிதாக பதிவு செய்தல், பங்களிப்பு, சிப் (Sip) ஆகியவை என்பிஎஸ் திட்டத்தில் உள்ளன. அனைத்து சேவைகளுக்கும் குறைந்தபட்ச கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் NPS கணக்கில் பங்களிப்பு வரம்பு 14 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.