மே 2 முதல் ஜூன் 15 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!
வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மேற்குவங்கத்தில் உள்ள அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு மே 2 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவில் அதிகமான வெப்பச்சலனம் இருந்து வருகிறது. கூடுதல் வெப்பத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பொழிவும் இருக்கிறது. எப்போதும் மார்ச் ஏப்ரல் மாதங்களிலேயே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் அனைத்தும் முடிக்கப்பட்டு கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக காலம் தாழ்த்தி தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திலிருந்து தான் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பிரதமர் மோடியின் முடிவு என்ன?
டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் மேற்கு வங்கத்திலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் மக்களுக்கு தோல் வியாதிகள் போன்ற சில உடல் உபாதைகள் வந்தபடி இருக்கின்றன. ஏற்கனவே வழக்கத்திற்கும் மாறாக கூடுதல் வெப்ப சலனத்தின் காரணமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அதிகமான வெப்பநிலை நிலவி வருவதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுவது தொடர்பாக கடந்த புதன்கிழமை அன்று முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மேற்கு வங்கத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மே 2 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.