IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!
இந்திய பொது போக்குவரத்தில் ஒன்றான ரயில் போக்குவரத்து பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ரயில்வே துறை தற்போது முன்பதிவு செய்வதில் கூடுதலான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.
டிக்கெட் முன்பதிவு
இந்தியாவில் ரயில் போக்குவரத்து சேவை மிகவும் குறைவான விலையில் வழங்கி வருவதால் இதில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதனால் கொரோனா கால கட்டத்தில் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அமல்படுத்தியது. அத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டு வருகிறது.
இந்தியா முழுவதும் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விளக்கம்!
அதன்படி ரயிலில் தற்போது முன்பதிவில்லா சேவையை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ள புதிய வசதியை IRCTC நிறுவனம் அறிவித்துள்ளது. ரயிலில் டிக்கெட் முன் பதிவு செய்ய ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பு புக் செய்து காத்து இருக்க வேண்டும். இதனை தவிர்க்க IRCTC நிறுவனம் புதிய வசதியை பற்றிய அறிவிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தெரிவித்தாவது, முன்பதிவு செய்யும் போது ரயில்களில் உள்ள காலியான இருக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதனை அறிந்து கொள்ள புஷ் நோட்டிபிகேஷன் வசதியை கொண்டு வந்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு!
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் IRCTC இணையதளத்திற்கு புஷ் நோட்டிபிகேஷன் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து ரயிலில் இருக்கை காலியாக இருந்தால் இது குறித்த அறிவிப்பு பயனாளிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அத்துடன் இருக்கை காலியாக இல்லாத சமயத்தில் முன்பதிவு செய்த ஏதேனும் ஒரு பயணி தனது டிக்கெட் ரத்து செய்தாலும் இது குறித்த அறிவிப்பும் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் ரயில் எண் பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருக்கும். பயணிகள் தங்களுக்கு தேவையான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.