விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – விரைவில் சீசன் 2 அறிமுகம்! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா என எதிர்பார்த்த சமயத்தில் பாக்கியலட்சுமி தொடர் விரைவில் முடிவடையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் சீசன் 2 ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய கோபி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார். தற்போதெல்லாம் அடிக்கடி ராதிகாவின் வீட்டிலேயே கோபி தங்கி விடுகிறார். இதனால் பாக்கியாவிற்கும் சந்தேகம் வந்துவிட்டது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இது ஒரு புறம் இருக்க மறு புறம் பாக்கியா பெயரை கேட்டாலே ஏன் கோபி பயப்படுகிறார். அவரை சந்திக்க வாய்ப்புகள் அமையும் போதெல்லாம் கோபி ஏன் சாக்கு சொல்லி கிளம்பிவிடுகிறார் என ராதிகாவிற்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. இந்நிலையில் பாக்கியாவின் மகனான செழியனும் ஜெனி கூட சண்டையிட்டு கொண்டே இருக்கிறார். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளும் அளவிற்கு செழியன் மற்றும் ஜெனிக்கு நடுவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
பாக்கியாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரிந்த பின்பு பாக்கியாவின் மன நிலை என்னவாக இருக்கும் எனவும், கணவரின் ஆசைப்படி ராதிகாவுடன் வாழ அனுமதிப்பாரா அல்லது தனது கணவரை யாருக்காகவும் விட்டு கொடுக்காமல் ராதிகாவை எதிர்த்து நிற்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பாக்கியலட்சுமி தொடர் முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தொடரின் சீசன் 2 விரைவில் அறிமுகமாக இருக்கிறது. சீசன் 2ல் நதியா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.