அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரத்து செய்யப்பட்ட கார்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நீங்கள் 6 மாத காலமாக ரேஷன் கார்டை உபயோகப்படுத்தவில்லையென்றால் ரத்து செய்யப்பட்டு விடும். தற்போது இதனை ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் கடந்த 2016ம் ஆண்டு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு”, என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை எளிதாக பெற முடியும். இத்திட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதனால் தற்போது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
NPL நிறுவனத்தில் 25 காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மேலும் தற்போது பெரும்பாலானோர் 6 மாதங்களுக்கு மேல் ரேஷன் கார்டை உபயோகப்படுத்தமால் உள்ளனர். அதாவது தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால் அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவான விலையில் பொருட்கள் வாங்க தேவையில்லை அல்லது அவர் மலிவான உணவு தானியங்களை வாங்கத் தகுதியற்றவர் என்று அவரின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை ஆக்டிவேட் செய்ய முதலில் மாநில அல்லது மத்திய அரசின் AePDS இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
தற்போது ரேஷன் கார்டை ஆக்டிவேட் செய்வதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
1. முதலாவதாக https://www.tnpds.gov.in/ போர்ட்டலில் இருக்கும் ‘Ration Card Correction’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
2. இதையடுத்து ரேஷன் கார்டு திருத்தம் என்ற பக்கத்தில் உள்ள படிவத்தில் தங்களின் விவரங்களை நிரப்ப வேண்டும்.
3. அடுத்ததாக உங்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை தற்போது சரி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு – கல்வித்துறை அறிவிப்பு!
4. இதனை தொடர்ந்து விவரங்கள் நிரப்பிய இந்த விண்ணப்பத்தை பொது விநியோக அமைப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
5. ரேஷன் கார்டை ஆக்டிவேட் செய்வதற்கான விண்ணப்பத்தை அதிகாரிகள் சரிபார்த்த பின்பு ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்படும்.