தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு – கல்வித்துறை அறிவிப்பு!
1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை வகுப்பு நடைபெற இருக்கிறது. மே 13 ஆம் தேதியில் இருந்து ஜூன் 13 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொதுத்தேர்வு:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு கண்டிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. மேலும், பொதுத் தேர்விற்கான கால அட்டவணையும் சமீபத்தில் வெளியானது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வரும் மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி நிறைவடைகிறது. மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நல்ல ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரையும் நடைபெறும் எனவும், பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் எனவும், தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வை 9,55,474 பேரும், 11 ஆம் வகுப்பு தேர்வை 8,83,884 பேரும், 12 ஆம் வகுப்பு தேர்வை 8,37,317 பேரும் எழுதவுள்ளனர்.
TNPSC தேர்வர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு? தமிழில் நடத்த கோரிக்கை!
மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது மற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எதுவும் கிடையாது. ஆனால் இவர்களுக்கும் மே 13 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும். இதனால் 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும், 12ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.