அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – இதனை உடனே செய்யுங்கள்!
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மலிவான விலையில் உணவு பொருட்கள் பெற வேண்டும் என்று ரேஷன் கார்டு வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் “ஒரே நாடு ஒரே கார்டு திட்டம்” என்ற திட்டத்தை அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கான முழு விபரத்தை பார்ப்போம்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் பொருட்களை தகுதியான நபர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி “ஒரே நாடு ஒரே ரேஷன்”, என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி இத்திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். மேலும் தற்போது ரேஷன் பொருட்கள் தகுதியுள்ள பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பதன் மூலமாக இணையலாம். இதற்கு கால அவகாசம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முன்பதிவின் போது மோசடிகளை தவிர்க்கும் வழிமுறைகள் இதோ
அதன்படி தற்போது ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தில் இணைவதற்கு வருகிற ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கு uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று start now என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதில் முகவரி, மாவட்டம், மாநிலம் உள்ளிட்ட விவரங்களை சரியாக உள்ளிட வேண்டும். அத்துடன் இசேவை மையத்திற்கு சென்று ஆதாரை இணைக்க அசல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு உள்ளிட்டவை தேவைப்படும். மேலும் இதுவரை தங்களின் ரேஷன் கார்டை இணைக்காத நபர்கள் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையெனில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.