SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – முன்பதிவின் போது மோசடிகளை தவிர்க்கும் வழிமுறைகள் இதோ
எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பயண டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்யும் போது சந்திக்கும் மோசடிகளை தவிர்க்க குறிப்பிட்ட சில பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோசடி எச்சரிக்கை:
நீங்கள் SBI வங்கியின் வாடிக்கையாளராக இருந்து கோடை விடுமுறைக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் பயண டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்யும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்று வங்கி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. அதாவது, முன் பதிவின் போது ஏற்படும் அலட்சியத்தால் உழைத்து சம்பாதித்த பணத்தை வாடிக்கையாளார்கள் இணைய மோசடியில் இழக்க நேரிடும். இதனால் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி, பயணங்கள் மற்றும் விடுமுறையின் போது தங்கள் பாதுகாப்பை இலகுவாக கருத வேண்டாம் என்று தனது வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது முன்பதிவு மோசடிகளை தவிர்க்கும் விதமாக SBI வங்கி சில பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை பகிர்ந்துகொண்டுள்ளது. இது குறித்த ட்விட்டர் பதிவில், ‘கோடை விடுமுறைகள் வேடிக்கை நிறைந்த குடும்ப பயணங்களுக்கான நேரம். இந்த நேரத்தில் உங்கள் பாதுகாப்பை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை மனதில் வைத்து, விழிப்புடன் இருங்கள் #SafeWithSBI’ என்று வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக SBI பகிர்ந்துள்ள குறிப்புகளை இப்போது விரிவாக காணலாம்.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
- நிதி பரிவர்த்தனைகளுக்கு இலவச பொது வைஃபையை பயன்படுத்த வேண்டாம்.
- புதிய இடங்கள் அதிக விழிப்புணர்வு முக்கியம் என்பதால் உங்கள் அட்டைகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.
- பணம் செலுத்தும் முன் அல்லது உங்கள் வங்கி மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதற்கு முன் இணைப்புகளை சரிபார்க்க வேண்டியது அவசியம்.
இப்போது, சைபர் மோசடி குறித்து எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை எச்சரிப்பது இது முதல் முறை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆன்லைன் மோசடிகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள் மற்றும் பணம் செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை SBI தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறது. அந்த வகையில், யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அடிப்படையிலான கூகுள் பே, பேடிஎம், ஃபோன்பே போன்ற பயன்பாடுகள் ஆன்லைனில் பணம் செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல் போன்றவற்றுக்கு மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.
இப்படி ஆன்லைனில் பணம் செலுத்தும் போது மட்டுமே மக்கள் UPI பின்னை உள்ளிட வேண்டும் என்று SBI கூறியுள்ளது. இந்த UPI பின் என்பது பணத்தை மாற்றுவதற்கு மட்டுமே தேவை. பெறுவதற்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் பணம் அனுப்பும் முன் மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி ஆகியவற்றை எப்போதும் சரிபார்க்கவும். இந்த UPI பின்னை யாருடனும் பகிர வேண்டாம். நிதி பரிமாற்றத்திற்கு ஸ்கேனரைப் பயன்படுத்துவது சிறந்தது. ஏதேனும் பணம் செலுத்துதல் அல்லது தொழில்நுட்பச் சிக்கலுக்கு ஆப்ஸின் உதவிப் பிரிவைப் பயன்படுத்தவும். இதில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் வங்கியின் புகார் தீர்வு போர்டல் மூலம் தீர்வு காணும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.