10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – CBSE வாரியம் முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் உள்ள அனைத்து CBSE பள்ளிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாரியத் தேர்வுகளை வரும் கல்வி ஆண்டு முதல் ஒற்றைத் தேர்வு(single board exam) வடிவத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
CBSE தேர்வுகள்:
இந்தியாவில் CBSE பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகவே பாடத்தை நடத்தி வந்தனர் ஆசிரியர்கள். மேலும் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா நோயின் ஆட்டம் குறையத் துவங்கியதால் அந்தந்த மாநில அரசு பல தளர்வுகளை வெளியிட்டது. அதில் முக்கிய தளர்வாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப் பட்டது. மேலும் 2020 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தாமல் கடைசியாக நடந்த பருவ தேர்வின் அடிப்படையில் அவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டது.
ரூ.9 லட்ச ஊதியத்தில் மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் வருகின்ற அடுத்த கல்வி ஆண்டான 2022-23 சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வை ஒற்றைத் தேர்வு முறையில் நடந்த இருப்பதாக CBSE பள்ளி வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு உள்ள மூத்த அதிகாரிகளின் கூற்றின் படி, பள்ளிகளில் இருந்து பிரதிநிதித்துவங்களை பெற்ற பிறகு ஒற்றைத் தேர்வு முறையை மீண்டும் கொண்டு வர வாரியம் முடிவு செய்து உள்ளது.
BECIL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!
மேலும் இரண்டு பருவத் தேர்வு முறை இனி தொடரும் என்று சிபிஎஸ்இ ஒருபோதும் தெரிவிக்கவில்லை. இது ஒரு முறை சூத்திரம் மட்டுமே. இப்போது பள்ளிகள் முழு திறனுடன் செயல்படுவதால், இப்போதைக்கு ஒரு கட்ட தேர்வு முறையை மீண்டும் தொடர்வது தான் முடிவு என்றும் CBSE பள்ளிகளின் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் முதல் பருவத் தேர்வில் வெறும் கொள்குறி வகையான கேள்விகள் இருக்கும் நிலையில், இரண்டாம் அமர்வு எழுத்துத் தேர்வு வினாத்தாளில் புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் வரும். அதனை தொடர்ந்து, மாணவர்கள் இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு அடிபப்டையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ சார்பில் தெரிவித்துள்ளது.