தூத்துக்குடியில் நாளை ( ஜூலை 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தூத்துக்குடியில் நாளை ( ஜூலை 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் நாளை ( ஜூலை 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் நாளை ( ஜூலை 7) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணி தவறாமல் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். அந்த வகையில் நாளை தூத்துக்குடியில் எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

மின்தடை:

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியது, தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் உயர் மின் அழுத்த பாதைகளில் பழுதுகள் சீரமைத்தல், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்தல் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

நடிகை ஆலியா மகள் ஐலாவுடன் செய்யும் சேட்டைகள் – வைரலாகும் வீடியோ!

இதனால் தூத்துக்குடி திரேஸ் நகர், காமராஜ் நகர், பாரதி நகர், குமரன் நகர், நந்த கோபாலபுரம், அழகேசபுரம், தெப்பக்குளம் தெரு, சிவன் கோவில் தெரு, செல்வீஜர் தெரு, சிவன் கோவில் ரதவீதிகள், பெருமாள் கோவில் தெரு, வ.உ.சி. சாலை, கிப்சன் புரம், ரெங்கநாதபுரம், ரஹ்மத்துல்லாபுரம், எட்டையாபுரம் ரோடு, பி.ஆர்.நகர், வளைவு ரோடு, சிவன் கோவில் கிழக்கு, வடக்கு காட்டன் ரோடு, டபிள்யூ.ஜி.சி.ரோடு மற்றும் பீச்ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.

முத்தையாபுரம் பகுதி: இதே போன்று, சிப்காட் அருகே உள்ள மடத்தூர், மடத்தூர் பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், முத்து நகர், பசும்பொன் நகர், தபால் தந்தி காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், முத்தையாபுரம் அருகே உள்ள அபிராமி நகர், முள்ளக்காடு, பாலாஜி நகர், தேவி நகர், பொட்டல்காடு, ஆதிபராசக்தி நகர், கீதா நகர், திருச்செந்தூர் மெயின் ரோடு, அய்யன் கோவில் தெரு, சூசை நகர், ஜே எஸ் நகர், சுந்தர் நகர், பாரதி நகர், எழில் நகர், குமாரசாமி நகர், அம்பேத்கார் நகர், அத்திமரப்பட்டி, பொன்னான்டி நகர், கிருஷ்ணா நகர், வீர நாயக்கன் தட்டு, காலாங்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், ஒட்டநத்தம் அருகே உள்ள சண்முகபுரம், பாண்டியாபுரம், மணியாச்சி, பாறைக்குட்டம், வடமலாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி, கவர்னகிரி, வீரன் சுந்தரலிங்கம் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

வல்லநாடு : மேலும் தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வல்லநாடு துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், அனந்த நம்பி குறிச்சி, எல்லநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விலக்கு, முருகன் புரம், ஈச்சந்தா ஓடை, நாணல் காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார் குளம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!