தமிழகத்தில் டிச.14 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 14ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவிலாகும். இக்கோயில் பக்தர்களால் திருவரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் நடுவே தீவு போன்ற பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயில் மிகவும் பழமையானது. இத்திருக்கோயிலில் வீற்றுள்ள ரங்கநாதருக்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இத்திருக்கோயிலில் தமிழ் மாதமான மார்கழியில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறக்கப்படும். அதில் பங்கேற்க பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
TCS iON தேசிய தகுதித் தேர்வு – டிச.15 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
அன்றைய தினம் பகல் பத்து, இரா பத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நடைபெறும் பத்து திருநாட்களிலும் உற்சவரான பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஸ்ரீ ரங்கத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் உள்ள வைணவ தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமர்சியாக நடைபெறும். வழக்கம் போல நடப்பாண்டும் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படவுள்ளது.
இனி ‘இந்த’ வங்கியில் பணம் எடுக்க தடை – ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!!
அதன்படி வைகுண்ட ஏகாதசி உற்சவம், கடந்த 3ம் தேதி இரவு, திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 2021ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ரங்கநாதர் கோயில் காலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பையொட்டி அம்மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு 18ஆம் தேதி சனிக்கிழமையை வேலை நாளாக அறிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விழாவானது டிசம்பர் 24ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.