முதுகலை படிப்புக்கான ‘டான்செட்’ தேர்வு விண்ணப்பம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இந்த ஆண்டு நடத்தப்படும் டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்செட் தேர்வு:
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள முதுகலை படிப்புகளான எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளில் சேர நடத்தப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும். இந்த தேர்வுகளை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகள் எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் தேர்வுகள் நடைபெற இருந்தது. இதற்கான தேர்வு கட்டணம் ரூ.600 என அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற்றது.
அண்ணா பல்கலை இணைப்பு சான்றிதழ் பெறுதல் – கால அவகாசம் நீட்டிப்பு!!
இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய www.annauniv.edu இணையதளத்தை பார்வையிடலாம். இந்நிலையில் இந்த விண்ணப்பங்கள் அனுப்ப பிப்ரவரி 16 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இறுதிகட்ட முடிவை பிப்ரவரி 23 ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 5 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்