செமஸ்டர் கட்டணங்களை செலுத்த கால அவகாசம் – அண்ணா பல்கலை. அறிவிப்பு !
பி.இ செமஸ்டர் கட்டணங்களை செலுத்த செப்டம்பர் 19 வரை செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் கால அவகாசம் வழங்கி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு :
கொரோனா பாதிப்பு காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. ஆகஸ்ட் – நவம்பர் செமஸ்டர் கட்டணத்தை ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் செலுத்துமாறும் மேலும் செலுத்த தவறினால் அபாரதம் அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
செமஸ்டர் கட்டணத்திற்கு கால அவகாசம்:
உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் கட்டணங்களை செலுத்த கால அவகாசம் வழங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புது அறிவிப்பின் படி, பி.இ செமஸ்டர் கட்டணங்களை செலுத்த செப்டம்பர் 19 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணத்தை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்