அண்ணா பல்கலை எம்.டெக் பாடப்பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு – ஐகோர்ட் கேள்வி!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வழங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 10% சதவீத இடங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உயர் நீதிமன்றம் கேள்வி:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதியில் எம்.டெக் படிப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 49.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டது. இதற்கு உடன்பாடு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகம் எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்வதாக அறிவித்தது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடத்துமாறு உத்தரவிட்டனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படிப்புகளில் மத்திய அரசு வழங்கிய 49.5% இடஒதுக்கீடு படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவின மாணவர்களுக்கு கூடுதல் 10 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்திடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் – 8500 பேர் நியமனம்!!
அதன்படி, பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்தியது ஏன்? மாநில அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில் எம்.டெக் படிப்பில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது ஏன்? என அண்ணா பல்கலைக்கழகத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து பதிலளிக்க மார்ச் 12 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவித்துள்ளது.