நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் தேர்வுகள் அக். 26ல் தொடங்கும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
அண்ணாபல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டிர்க்கான தேர்வு அக்டோபர் 26 முதல் தொடங்கும் என்று சற்று நேரத்திற்கு முன் அறிவித்தது. நாடு முழுவது பரவி வரும் கொரானா நோய் தொற்று காரணமாக பள்ளி கல்லுரிகள் அனனத்தும் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனிடையில் மாணவர்களுக்கு கல்லூரி பருவத்தேர்வுகள் நெருங்கியது. எனவே மாணவர்களுக்கு நேரடியாக கல்லூரியில் தேர்வு வைக்க இயலாமல் ஆன்லைன் மூலமாக மட்டும் சில தேர்வுகள் நடைபெற்று அத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இதனிடையில் தற்போது கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகளும் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களும் வீட்டில் இருந்தபடியே படித்து கொண்டு வருகின்றனர். தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான பாட திட்டங்களை ஆன்லைன் வகுப்புகளிலேயே நடத்தி முடித்து விட்டதால் மாணவர்களுக்கு பருவத்தேர்வு வைக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அதன் படி நாளை முதல் செய்முறைத்தேர்வுகள் தொடங்குகிறது மற்றும் செமஸ்டர் தேர்வானது அக்டோபர் 26 முதல் தொடங்கவுள்ளதாகவும் தற்சமயம் அறிவித்துள்ளது. எனவே அண்ணாபல்கலைக்கழக மாணவர்கள் தங்களது தேர்வுகளுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்