திடீரென உயர்ந்த பால் விலை.. அதுவும் லிட்டருக்கு இவ்வளவா..?? மக்கள் ஷாக்..!!
இந்தியாவில் பால் உற்பத்தியில் முக்கிய நிறுவனமாக திகழும் “அமுல்” நிறுவனம் தனது பால் விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) வெளியிட்ட அறிக்கையில், “அமுல் பாலின் விலையானது 4% அதாவது லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த விலை ஏற்றம் நேற்று (01-05-2025) முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப். 7 ஆம் தேதி விடுமுறை…!! சற்று முன் கிடைத்த முக்கிய தகவல்..!!
அதன்படி, அமுல் கிரீம் பால் லிட்டருக்கு ரூ.65 என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.67 ஆகவும், டோன்ட் பால் லிட்டர் விலை ரூ.53 இருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அமுல் கோல்ட் 500 மில்லி லிட்டர் ரூ.34-க்கும், அமுல் தாசா 500 மில்லி லிட்டர் ரூ.28-க்கும் மற்றும் அமுல் சக்தி 500 மில்லி லிட்டர் ரூ.31-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”. மேலும், அமுல் விலை அதிகரிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக மதர் டெய்ரி நிறுவனம் அதன் விலையை ரூ. 2 அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.



























