அம்பானி VS எலான் மஸ்க்….சாதக முடிவு யாருக்கு..?? ” கொந்தளிக்கும் ஆகாஷ் அம்பானி”..!!
இந்தியாவில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளை செயற்கைகோள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வயா சாட், சிபி டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகிறது. மேலும், “X” தளத்தின் தலைவரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், அமேசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைகோள் மூலம் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்காக கொண்டு வந்தாச்சு “பிங்க் பேட்ரோல்”..!! ” அட, இத நாங்க எதிர்பாக்கல”..!!
அந்த வகையில், இவ்விரு நிறுவனங்களுக்கும் இந்த சேவையை பகிர்ந்தளிக்க மத்திய அரசின் TRAI நிறுவனமானது திட்டம் தீட்டி வரும் நிலையில், அதை விரும்பாத வகையில் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமானது, இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், “இந்தியாவின் தரவுகள் இந்தியாவில் மட்டுமே இருக்க வேண்டும்” என்று ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.



























