அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் தொடர் 3 நாட்கள் விடுமுறைகள் குறித்த புதிய உத்தரவை அரசு அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை:
தமிழகத்தைப் போலவே அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. மேலும் தேர்தலுக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளும் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.
கற்பித்தல் துறையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்? – அருமையான பணி வாய்ப்பு இதோ!
இந்நிலையில் தேர்தல் வாக்கு பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி அன்று புதுசேரி முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களுக்கும் கூடுதலாக விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.