தமிழகத்தில் வெப்ப அலை வீசும்.. முன்னெச்சரிக்கை அவசியம் – உஷார் மக்களே!

0
தமிழகத்தில் வெப்ப அலை வீசும்.. முன்னெச்சரிக்கை அவசியம் - உஷார் மக்களே!

கடந்த 24 மணி நேரத்தின் நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதை தவிர மற்ற அனைத்து தமிழக மாவட்டங்களிலும் அதிக அளவிலான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மே 1ஆம் தேதி வரை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

1000 பொதுத்தமிழ் கேள்விகள் | General Tamil Questions| TNPSC Special மாரத்தான்

மேலும் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் மே 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடும். தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!