வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை பதிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறையானது தகவல் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு ஏராளமான நலன்களை வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர்கல்விகளில் குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
TNPSC தேர்வர்கள் எவ்வளவு மார்க் எடுப்பீங்க? – உடனே இதை பாருங்க!
இந்நிலையில் வரும் 2024 – 25 ஆம் கல்வியாண்டிற்க்கான தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் 1ம் தேதி முதல் ஆரம்பித்தது. இதுவரையிலும் மொத்தம் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 940 மாணவர்கள் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் குறிப்பாக இரண்டு புள்ளி 90 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாக தகவல் விபரங்கள் தெரிவித்துள்ளது.