Airtel வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – ஸ்பேம் கால்களை எச்சரிக்கை வசதி!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. போலியான பரிசுகள் வழங்குவது, ATM அட்டை Lock ஆகியுள்ளது என்று கூறி பல காலமாக மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மோசடி நிறுவனங்கள் பொதுமக்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்து வருகின்றனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் மாற்றம் – முதல்வர் அறிவிப்பு!
முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இதில் Airtel நிறுவனம் விளம்பர மற்றும் மோசடி செல்போன் அழைப்புகளை உஷார்படுத்தும் செயற்கை நுண்ணறிவு வசதியை அறிமுகம் செய்துள்ளது. தொல்லை தரும் எஸ்.எம்.எஸ்.கள் குறித்தும், எந்தவித கட்டணமும் இன்றி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தரப்படும் என்று ஏர்டெல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



























