பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ முக்கிய அறிவிப்பு!!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் பயன்படுத்துவது மூலமாக இந்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் அபியான் (தற்சார்பு இந்தியா) திட்டம் வெற்றி பெறும் என ஏஐசிடிஇ அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஏஐசிடிஇ அறிவிப்பு:
இந்திய நூலாசிரியர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மாணவர்களுக்கு கற்பித்தல் மூலமாக இந்திய புத்தகங்கள் உலகளவில் பயன்பாட்டிற்கு வரும் என ஏஐசிடிஇ பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்ட அறிக்கையில், “இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇ பரிந்துரை செய்த இந்திய நூலாசிரியர்கள் எழுதிய நூல்களை கற்பிக்க முன் வர வேண்டும்.
புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 19 நடைபெறுகிறது!!
புகழ்பெற்ற இந்திய நூலாசிரியர்களின் புத்தகங்கள் மூலமாக பொறியியல் மற்றும் தொழிநுட்ப படிப்புகளில் உள்ள இளங்கலை மற்றும் முதுகலை பிரிவு மாணவர்களுக்கு சிறந்த கல்வி மூலம் அந்த படிப்புகளை மேம்படுத்தவும், மேலும் தொழில் நிறுவனங்களில் எதிர்ப்பார்வை ஈடு செய்யவும் இந்திய ஆசிரியர்கள் வெளியிட்ட புதிய பாடத்திட்டம் அடங்கிய புத்தகத்தை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.
TNPSC குரூப் 4 பாடத்திட்டம் வெளியீடு – தேர்வர்கள் கோரிக்கை!!
இந்த பாடத்திட்டங்களை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளது. பொறியியல் மற்றும் தொல்நூட்ப கல்வி நிலையங்களில் இந்திய நூலாசிரியர்களின் படைப்புகளை பயன்படுத்துவது மூலமாக இந்திய புத்தகங்கள் உலகளவில் வளர்ச்சி பெரும். இதன் மூலம் இந்திய தற்சார்பு திட்டமான ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம் வெற்றி பெரும்”, இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்