கலை, அறிவியல் & பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு – ஏஐசிடிஇ தலைவர் விளக்கம்!!
நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து தற்போது திட்டமில்லை. ஆனால் அது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தலைவர் தெரிவித்துள்ளார்.
பொது நுழைவுத் தேர்வு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்துவது போல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத்தேர்வு மத்திய, மாநில அளவில் நடத்தப்பட வேண்டும் என யுஜிசி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு நடைமுறைபடுத்தப்பட உள்ள புதிய கொள்கையுடன் இது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் சஹஸ்ரபுதே அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர மத்திய, மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலில் படி இந்த கல்வியாண்டில் நுழைவுத்தேர்வு முறையை செயல்படுத்த திட்டமில்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் – பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்!!
இருந்த போதிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை உள்ளது என்று கூறினார். ஏற்கனவே மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்துள்ளது. தற்போது நர்சிங், சித்தா படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.