தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

0
தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் - வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!
தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் - வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!
தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று வெளியான வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு டான்ஜெட்கோவுக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு:

தமிழகத்தில் 2022-23 ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2வது முறையாக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் விதமாக பல்வேறு அறிக்கைகள் இடம் பெற்றுள்ளன. அப்போது பேசிய வேளாண் அமைச்சர், முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்தில் 132 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மூன்று ஆயிரம் மானாவாரி நிலத் தொகுப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் மூன்று லட்சம் மானாவாரி விவசாயிகள் வருமானமும் வாழ்வாதாரமும் உயர்ந்திடும். இதனைத் தொடர்ந்து பயிர் காப்பீட்டுக் கட்டண மானியத்தில் 2 ஆயிரத்து 339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – கடைகள் விடுமுறை!

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு நடப்பாண்டில் 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல் அறுவடைக்கு பின், பயறு வகைகள் சாகுபடியினை ஊக்கப்படுத்த ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் கூடுதலாக 13 ஆயிரம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தி செய்யப்படும். மேலும் வேளாண் கருவிகள் தொகுப்பு 2022-23 ஆண்டிலும் அரை லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு 15 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும். இதை தொடர்ந்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக டான்ஜெட்கோவுக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விதை முதல் விளை பொருட்கள் வரை டிஜிட்டல் முறையில் விவசாயம் மேம்படுத்தப்பட உள்ளது. இதனால் டிஜிட்டல் விவசாயத்துக்கு ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கான மின்னணு வேளாண் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிராம நிலங்களுக்கு புவியிடக்குறியீடு, புதிய பயிர் திட்டத்துக்கான பரிந்துரை, பூச்சி, நோய்களுக்கான செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!