TNSAMB தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியத்தில் வேலை – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
Technical Coordinator-I & II, Data Entry Operator (DEO) மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNSAMB தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய வேலைவாய்ப்பு விவரங்கள்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு அதாவது Technical Coordinator-I – 01, Technical Coordinator-II – 01, Data Entry Operator – 01, Office Assistant – 01 ஆகிய பதவிகளுக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. Technical Coordinator-I பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.Sc, MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Technical Coordinator-II பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.Sc அல்லது Post Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.SC, BCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Office Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technical Coordinator-I மற்றும் Technical Coordinator-II பணிக்கு விண்ணப்ப தாரர்கள் பணிக்கு தொடர்புடைய field of Managing Development Project or Agri Export or Agri-Business Development துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
Data Entry Operator பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். Office Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 1 வருட முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் நேர்காணல் குறித்த முழு விவரமும் பின்னர் அறிவிக்கப்படும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து 20.03.2022ம் தேதி மதியம் 3.00 மணிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேரும்படி அனுப்பி விண்ணப்பிக்கவும்.