தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – கடைகள் விடுமுறை!
ஜனவரி 30 ஆம் தேதி பொங்கல் பரிசு பொருள் விநியோகம் காரணமாக ரேஷன் கடைகள் செயல்பட்டது. இந்த வேலை நாளை ஈடுகட்ட இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகள் விடுமுறை:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) பயன்படுத்தி 69 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். நூற்றில் 86 சதவீத மக்கள் அதாவது இந்த திட்டத்தால் 6,82,12,884 நபர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மலிவான விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மார்ச் 21 முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசின் அதிரடி முடிவு!
முன்னுரிமை குடும்ப அட்டையான PHH ரேஷன் அட்டை வைத்திருந்தால் அனைத்து பொருட்களையும் வாங்க முடியும். முன்னுரிமை அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டையான PHH – AYY ரேஷன் அட்டை வைத்திருந்தால் அட்டைதாரர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படும். மேலும், முன்னுரிமையற்ற அரிசி குடும்ப அட்டைகள் எனப்படும் NPHH ரேஷன் அட்டை வைத்திருந்தால் அனைத்து பொருட்களும் வாங்க முடியும். NPHH – S ரேஷன் அட்டை வைத்திருந்தால் அரிசி தவிர அனைத்து பொருட்களும் வாங்க முடியும். NPHH – NC ரேஷன் அட்டைதாரர்களுக்கு எந்த பொருட்களும் வழங்கப்படாது.
மேலும், ஜனவரி 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு பொருட்களை அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக பணியாற்றினர். இதனால் இந்த வேலை நாளை ஈடு செய்ய பிப்ரவரி 26 ஆம் தேதியான சனிக்கிழமையன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பிப்ரவரி 26 ஆம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம் போல செயல்பட்டது. மேலும், இந்த ஜனவரி 30 ஆம் தேதிக்கான வேலை நாளை ஈடு செய்ய இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.