நடிகை சமந்தாவை காண ஆயிரக்கணக்கில் கூடிய ரசிகர்கள் – பலத்த போலீஸ் பாதுகாப்பு!
நடிகை சமந்தா சமீப காலமாக அதிக அளவில் செய்திகளில் இடம் பிடித்து வரும் நிலையில், அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியுள்ளனர். இதனால் அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
நடிகை சமந்தா:
நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி 10 வருடங்களுக்கும் மேலாகி விட்டது. ஆரம்பத்தில் சமந்தாவின் திறமையை அறியாமல் வாய்ப்புகள் ஏதும் அவ்வளவாக கிடைக்கவில்லை. கிடைத்த படங்களும் வெற்றியின் பக்கம் செல்ல வில்லை. ஆனால் தளராமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார் சமந்தா. ஒரு வழியாக தமிழில் நான் ஈ படத்தின் மூலமும், தெலுங்கிலும் பிரபலமடைய தொடங்கினார். அதன்பின்னர் வந்த வாய்ப்புகள் அனைத்துமே பெரிய ஹீரோக்களுடன் தான் கிடைத்தது.
‘பாரதி கண்ணம்மா சீசன் 2’ சீரியலில் பாரதியுடன் இணையும் 2 கண்ணம்மா – ப்ரோமோ ரிலீஸ்!
இவர் நடித்த அத்தனை படங்களும் அதன்பிறகு வெற்றியை தான் சம்பாதித்தது. இதனால் சமந்தாவின் புகழ் தென்னிந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. கடந்த ஆண்டு இருந்து முதல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சங்கடங்களை சந்தித்து வந்தாலும் சமந்தா தனது திரைப்பயணத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து இடைவிடாமல் நடித்துக் கொண்டு தான் உள்ளார். இவர் சமீபத்தில் புஷ்பா படத்தின் பாடலுக்கு ஆடியது இந்தியா முழுவதும் வைரலாக பேசப்பட்டது.
‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி & மணிமேகலைக்கு நடந்த சம்பவம் – பெங்களூரு விசிட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
பாலிவுட்டை நெருங்கி விட்ட சமந்தா தான் தனது வேலையை தொடர்ந்து செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் ஒரு தனியார் கடை திறப்பு விழாவிற்கு சமந்தா வந்திருந்தார். அவரை காண அங்கு சுற்றியும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெருங்கூட்டம் கூடியது. இவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிக்காகவும் காவல்துறையினர் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.