தமிழகத்தில் மின்சாரத் துறையின் அதிரடி நடவடிக்கை – நிம்மதியில் பொதுமக்கள்!
தமிழகத்தில் மின்சாரத் துறையின் சேவைகளை மேம்படுத்த அரசு புதிய உத்தரவை பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்கள், ஒரு வாரத்திற்குள் புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
புதிய உத்தரவு
தமிழகத்தில் மின்சாரத் துறை குறித்த புகார்கள் அதிகம் வரும் நிலையில் அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறிப்பாக சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும். நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து – வலுக்கும் கோரிக்கை!
அது மட்டுமில்லாமல் பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அது குறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர்களில் சிலர், இன்னும் பணிக்கு வரவில்லை என்பதாகவும், புதிய பணியிடத்தில் சேராமல், மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் இடமாற்றம் செய்யப்பட்ட நபர், ஒரு வாரத்திற்குள் புதிய பணியிடத்தில் சேராவிட்டால், அவர்களது புரமோஷன் ரத்து செய்யப்படுவதுடன், விதிமுறைகளை மீறியதற்காக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.