விமானங்களில் டிக்கெட் கட்டண சேவைகளுக்கான கட்டண வரம்பு ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

0
விமானங்களில் டிக்கெட் கட்டண சேவைகளுக்கான கட்டண வரம்பு ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!
விமானங்களில் டிக்கெட் கட்டண சேவைகளுக்கான கட்டண வரம்பு ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!விமானங்களில் டிக்கெட் கட்டண சேவைகளுக்கான கட்டண வரம்பு ரத்து - மத்திய அரசு அறிவிப்பு!
விமானங்களில் டிக்கெட் கட்டண சேவைகளுக்கான கட்டண வரம்பு ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில், உள்நாட்டு விமான டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விரைவில் விமான கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் கூறுகின்றன. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கட்டண வரம்பு ரத்து:

கொரோனா காரணமாக அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் பல்வேறு நடவடிக்கைகளின் அடிப்படையில் கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான பயணங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த நிலையில் பயணிகளிடம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு வெளியானது. அதை தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் மத்திய அரசு உச்ச வரம்பை நிர்ணயித்தது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்னவென்றால் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும் ஆகும்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டண உச்ச வரம்பை வருகிற 31-ந் தேதி முதல் நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் பேரில், உள்நாட்டு விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விமான டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நீக்கும் மத்திய அரசின் முடிவை விமான நிறுவனங்கள் வரவேற்று உள்ளன. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “திட்டமிடப்பட்ட உள்நாட்டு சேவைகளின் தற்போதைய நிலை மற்றும் பயணிகளின் தேவையை மதிப்பாய்வு செய்த பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த கட்டண உச்ச வரம்பை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய்! கொல்லப்படும் குரங்குகள்? உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

வரும் 31.8.2022-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது” என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து விமான டிக்கெட் கட்டண முடிவு தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், “விமானங்களின் தினசரி தேவை மற்றும் விமான எரிபொருள் விலை போன்றவற்றை கவனமாக பரிசீலித்த பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான போக்குவரத்து வளர்ச்சிக்கான உறுதிப்படுத்தல் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டு போக்குவரத்தில் இந்தத் துறை வளர்ச்சியடையும் என்பதில் உறுதியாக உள்ளோம்'” என்று குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் விமான கட்டணங்கள் அதிகரிக்கும் என்பதால் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!