விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டின் இந்த வார எவிக்சன் அபிஷேக் தான் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸ் பல தடைகளையும் தாண்டி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. கொரோனா அபாயம் தொடர்ந்து நிலவி வந்த காரணத்தால் நிகழ்ச்சி இந்த வருடம் இருக்காது என்று முன்னதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் போட்டியாளர்களை தகுந்த முறையில் பரிசோதனை செய்து, முறையாக தனிமைப்படுத்தி வைத்திருந்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த சீசன் 5 நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக உலக நாயகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் கமல் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
எழிலை ஒதுக்கும் அமிர்தா, கோபி அலுவலகத்தில் உதவி செய்வதாக சொன்ன ராதிகா – இன்றைய எபிசோட்!
அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த வாரம் கமல் உடல்நலம் தேறி மீண்டு வந்துள்ளதால், அவர் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரையிலும், நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி,மதுமிதா, இசைவாணி மற்றும் ஜக்கி பெர்ரி போன்றவர்கள் வெளியேறியுள்ளனர். இவர்களில் அபிஷேக் உம் ஒருவர். ஆனால் அபிஷேக் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மீண்டும் போட்டியில் வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புது வீட்டுக்கு குடியேறிய மூர்த்தி, தனம்? ரசிகர்கள் ஷாக்!
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அபிஷேக் இந்த முறை சற்று வேறுபட்டு நடந்து வருகிறார். அதிக சண்டைகளை கிளப்பாமல் அமைதியாக இருந்து வருகிறார். ஆனால் முன்னதாக ஓட்டு போட்டு அவரை வெளியே அனுப்பிய மக்கள் தொடர்ந்து கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் எவிக்சன் லிஸ்டில் பெயர் வந்துள்ள அபிஷேக் மக்களிடம் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மீண்டும் அபிஷேக் ராஜா தான் வெளியேற போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அறிந்த அபிஷேக்-ன் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.