எழிலை ஒதுக்கும் அமிர்தா, கோபி அலுவலகத்தில் உதவி செய்வதாக சொன்ன ராதிகா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி அலுவலகம் சரியாக ஓடவில்லை என சொல்ல, ராதிகா நான் உதவி செய்கிறேன் என சொல்கிறார். பின் எழில் அமிர்தா வீட்டிற்கு வர அவரை ஒதுக்குவது போல நடந்து கொள்கிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவிடம் கோபி அலுவலகம் சரியாக இல்லை என சொல்கிறார். நான் வேற எதாவது வேலைக்கு போகலாம் என இருக்கிறேன் என சொல்ல, அதெல்லாம் வேண்டாம் நான் இனிமேல் உங்க அலுவலகத்திற்கு அடிக்கடி வருகிறேன் என ராதிகா சொல்கிறார். உன்னிடம் இது தான் மிகவும் பிடித்திருக்கிறது என கோபி சொல்ல ராதிகா சிரித்து கொண்டே இருக்கிறார். பின் எழில் அமிர்தா வீட்டிற்கு வருகிறார். ஆனால் உள்ளே வர முடியாமல் அமிர்தா சொன்னதை பற்றியே நினைக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புது வீட்டுக்கு குடியேறிய மூர்த்தி, தனம்? ரசிகர்கள் ஷாக்!
இருந்தாலும் உள்ளே வர அமிர்தா அவரை கூப்பிடாமல் உள்ளே செல்கிறார். பின் எழில் நிலா பாப்பாவை கொஞ்சிக் கொண்டிருக்க, அமிர்தா வேகமாக வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு செல்கிறார். என்னாச்சு அமிர்தா என கேட்க, குழந்தைக்கு பசி வந்திருக்கும் என அமிர்தா சொல்கிறார். எழில் அமிர்தா நடந்து கொண்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறார். பின் அமிர்தா எழில் மருத்துவமனையில் பேசியது தெரிந்தால் என்ன நினைப்பார்கள் என வருத்தப்படுகிறார்.
கோபி வீட்டில் இருக்க பாக்கியா இனிமேல் வீட்டில் சமைக்கமாட்டேன் வேறு இடம் பார்த்துவிட்டேன் அட்வான்ஸ் கொடுத்துவிட்டாச்சு என சொல்கிறார். உடனே நல்ல இருக்கா நீங்க பார்க்க வாங்க அப்படி எல்லாம் சொல்லாமல் இப்படி நான் பாத்திருக்கேன் என சொன்னா என்ன அர்த்தம் என கோபி கோவப்பட நீ மட்டும் எல்லாம் சொல்லிட்டு பண்ணுறியா என ராமமூர்த்தி கோபப்படுகிறார். பின் கோபி சமாளிப்பது போல பாக்கியாவிடம் நன்றாக பேசுகிறார். பின் எழில் வர உனக்கு வேலை செய்ய இடம் பாத்துருக்கேன் என சொல்கிறார்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு!
பாக்கியா நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் என சொல்ல, இனிமேல் நீ பெரிய இடத்திற்கு போக போகிறாய் என சொல்கிறார். ஜெனி பிசினஸ் செய்ய புதிய விளம்பரம் செய்ய வேண்டும் என கேட்கிறார். எழில் ஆமாம் விளம்பர படத்தில் உன்னை நடிக்க வைக்க போகிறேன் என சொல்ல ஈஸ்வரி பாக்கியாவை கிண்டல் செய்கிறார். பின் இரவு பாக்கியா தூங்கும் போது இனியாவிடம் சினிமா எல்லாம் எப்படி எடுப்பாங்க எழில் என்னை நடிக்க வைக்கிறேன் என சொல்லிருக்கான் நான் சேலையை பிடித்துக் கொண்டு நடித்தால் எப்படி இருக்கும் என கேட்கிறார். பின் இனியா உனக்கு ரொம்ப ஆசை தான் என கேட்கிறார். எனக்கு எப்போது நீ வேலை செய்யும் இடத்தை காட்ட போகிறாய் என கேட்க, சீக்கிரமாக கூட்டி செல்கிறேன். இனிமேல் அங்கையே சமையல் எல்லாம் செய்யலாம் என சொல்கிறார்.