நாட்டை அச்சுறுத்தும் புதுவகை தொற்று, ஒரே நாளில் 67,000 பலி எண்ணிக்கை – அதிர்ச்சி ரிப்போர்ட்!

0
நாட்டை அச்சுறுத்தும் புதுவகை தொற்று, ஒரே நாளில் 67,000 பலி எண்ணிக்கை - அதிர்ச்சி ரிப்போர்ட்!
நாட்டை அச்சுறுத்தும் புதுவகை தொற்று, ஒரே நாளில் 67,000 பலி எண்ணிக்கை - அதிர்ச்சி ரிப்போர்ட்!
நாட்டை அச்சுறுத்தும் புதுவகை தொற்று, ஒரே நாளில் 67,000 பலி எண்ணிக்கை – அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் ஏற்படுத்தி வரும் தாக்கத்திற்கு மத்தியில், தற்போது புதிய வகை தொற்று நோய் ஒன்று நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பற்றிய அறிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வகை தொற்று நோய்:

கடந்த 2020-ம் ஆண்டு உலகை உலுக்கிய கொரோனா என்னும் புதிய வகை தொற்று இது வரை இல்லாத வகையில் அதிக உயிர்பலிகளை வாங்கியது. அதிக வேகத்தில் பரவும் தொற்று வகையை சேர்ந்ததால் அதிக அளவில் கட்டுப்பாடுகள் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கொண்டுவரப்பட்டது. இதனால் நோய் பரவலின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனாலும், தொற்று பாதிப்பு முழுமையாக ஒழிந்த பாடில்லை. மேலும், மேலும் புதிய வகை வைரஸ்களாக உருமாற்றம் அடைந்து பரவி வருகின்றது.

இந்நிலையில், புதிதாக ஒரு வகை தொற்று நோய் கால்நடைகளுக்கு பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த சில மாதங்களாக உத்திரப்பிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் அதிக அளவிலான கால்நடைகளுக்கு தோல் தொற்றுநோய் பரவி வருகிறது. இதனால் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த தோல் கழலை நோயால் இதுவரை 67,000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (செப்.14) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

குறிப்பாக, புதுவகை தொற்று கண்டறியப்பட்டுள்ள மாநிலங்களில் ராஜஸ்தானில் மட்டும் ஒரு நாளில் சுமார் 600 முதல் 700 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேபோல், மற்ற மாநிலங்களில் பலி எண்ணிக்கை ஒரு நாளில் 100 க்கும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தற்போது ஆடு அம்மை தடுப்பூசியை பயன்படுத்துவதாகவும், இவை நல்ல முறையில் பலனளிப்பதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.இதனால், பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு முன்னதாக மத்திய அரசின் சார்பில் 1.5 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!