ஓபிசி இட ஒதுக்கீட்டில் 4 பிரிவுகள் – மத்திய அரசுக்கு பரிந்துரை!!
ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில் அரசு நிர்ணயித்த பரிசீலனை ஆணையம் ஓபிசி இட ஒதுக்கீட்டை 4 உள் பிரிவுகளாக பிரித்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிசி இட ஒதுக்கீடு:
மத்திய அரசு வேலைவாய்ப்பு, மாணவர் சேர்க்கை, நலத்திட்டங்கள் முதலியவை அனைத்து மக்களுக்கும் வகையில் அனைத்து பிரிவினருக்கும் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி வருகிறது.
பிப்.,28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
மத்திய அரசின் வேலை வாய்ப்பில் ஓபிசி பிரிவினருக்கு மொத்தம் 27% இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. ஓபிசி வகுப்பில் மொத்தம் 2,633 சாதிப்பிரிவுகள் உள்ளது. அதில், ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே தொடர்ந்து பலனடைவதாக புகார்கள் எழுந்தது.
பரிந்துரை ஆணையம்:
மக்களின் இந்த புகாரின் காரணமாக ஓபிசி வகுப்பு இடஒதுக்கீட்டில் தொகுப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு நீதியரசர் ரோகிணி தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது.
இந்த ஒதுக்கீட்டின் பரிந்துரையின் படி தான் மத்திய அரசில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
உள்ஒதுக்கீடு:
ஓபிசி இட ஒதுக்கீட்டில் மொத்தம் உள்ள 27% இட ஒதுக்கீட்டை 2, 6, 9, 10 சதவீதம் என 4 வகைகளாக பிரித்து உள்ஒதுக்கீடு வழங்க நீதியரசர் ரோகிணி தலைமையிலான ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்