தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை வெளியீடு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து பள்ளிகள் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மட்டும் தொடங்கி நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு வருந்தோரும் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
விளையாட்டு போட்டிகள்:
தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது. அதற்கடுத்து 9, 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கின. தற்போது 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளதால், அவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு – அரசு தேர்வுத்துறை இயக்குனர்!!
பள்ளி மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மண்டலம், மாவட்டம் என பல்வேறு படிநிலைகளில் வருடம்தோறும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். தற்போது கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்படாத வகுப்புகளுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் எடுக்கப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
மேலும் பள்ளிகளுக்கு நேரில் வருகை புரிந்துள்ள மாணவர்களுக்கும் கொரோனா அச்சம் காரணமாக விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்படவில்லை. எனவே வருடந்தோறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பு பள்ளிகளுக்கு மாவட்ட உடற்கல்வி இயக்குனர்கள் வாயிலாக அனுப்பப்பட்டு வருகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்