தமிழ் வளர்ச்சித்துறை உதவித்தொகை அதிகரிப்பு – ஆளுநர் அறிவிப்பு!!
தமிழகத்தில் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4,500 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழ் வளர்ச்சித்துறையின் பிற உதவித்தொகைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உதவித்தொகை அதிகரிப்பு:
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் உரையில் கல்வித்துறை பற்றிய பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட உள்ளதாகவும் ஆளுநர் கூறினார். அதுமட்டுமின்றி தமிழ் வளர்ச்சித்துறையில் உதவித்தொகை உயர்த்தப்பட்டது குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு – கல்வித்துறை திட்டம்!!
அதன்படி தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ.3,500 இல் இருந்து 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழ் அறிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.2000 ஆக இருந்த உதவித்தொகை ரூ.2,500 ஆகவும், எல்லை காவலர்களுக்கு 4,500 ரூபாயில் இருந்து ரூ.5,500 ஆகவும், அவர்களின் வாரிசுகளுக்கு ரூ.2,500 இல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்