தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு – கல்வித்துறை திட்டம்!!
தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், வரும் ஜூன் முதல் வாரத்தில் பொதுத்தேர்வினை தொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுத்தேர்வு திட்டம்:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டன. மேலும் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் வகுப்புகள் தொடக்கம் – வேளாண் பல்கலை அறிவிப்பு!!!
மேலும் பொதுதேர்விற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டாலும், அதனை நடத்தி முடிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படும். வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படும் நிலையில் இம்முறை அதற்கான வாய்ப்பில்லை.
அரசு வேலைவாய்ப்புகளில் ‘கிரீமிலேயர்’ இடஒதுக்கீடு – வருமான வரம்பை உயர்த்த திட்டம்!!
மேலும் மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட கூறியுள்ளார். இந்நிலையில் தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்டமன்ற தேர்தல் முடிந்து ஜூன் மாதத்தில் 15 நாட்களில் தேர்வுகளை நடத்தி முடித்து, தொடர்ந்து 20 நாட்களில் முடிவை அறிவிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் – ரூ.40 லட்சமாக அதிகரிப்பு!!
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் பொதுத்தேர்வுகளை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் முடித்து, ஜூலை இறுதியில் முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் எந்தெந்த நாளில் என்னென்ன தேர்வுகள் நடத்துவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு தான். திட்டமிடப்பட்டு உள்ள நாட்களில் தேர்வுகளை நடத்தி முடித்து முடிவுகளை வெளியிட அரசுக்கு பரிசீலனை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Thanks