தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

1
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் 9 மற்றும் 11ம் மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், மற்ற வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தமிழகத்தில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கு (1 முதல் 8) பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் – முதல்வர் துவக்கி வைப்பு!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்படப்பட்டவுடன் வினா வங்கி கையேடு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் ஹைடெக் லேப் உள்ளது என கூறிய அமைச்சர், நீட் மற்றும் ஜேஇஇ படத்திட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் ஏன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 9, 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!!

அதுமட்டுமின்றி யூடியூப், கியூஆர் கோடு மற்றும் கல்வி தொலைக்காட்சி என பல்வேறு வழிமுறைகளில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பின்னர் 9 முதல் 12ம் வகுப்புகள் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கும் பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்த அமைச்சர், பிற மாநிலங்களில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து முதல்வர் கவனித்து வருவதாக கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. அய்யா வணக்கம்
    1784 இல் ஆங்கிலேயர்கள் Bengal Asiatic society என்ற அமைப்பினை உருவாக்கி நம்முடைய அனைத்து இலக்கிய,இலக்கண, கலை போன்ற அனைத்தினையும் மொழிப்பெயர்ப்பு என்ற பெயரில் அனைத்தினையும் மாற்றி எழுதிவைத்து விட்டு போய்விட்டார்.

    Ex: தமிழ் மொழியில் ஆங்கிலேயர் செய்த வேலையினை பாருங்கள்.

    மொழி
    மொழி என்பது ஒரு கருவியாகும். ஒரு பொருளும் மற்றொரு பொருளும் தொடர்பு கொண்டு தனது தேவையினை பூர்த்தி செய்ய பயன்படுவதே மொழியாகும்.

    ஒருவர் தனது தாய்மொழியினை முழுமையாக அதாவது அகரவரிசை (Alphabets) எழுத்துக்களுக்கான பொருளுடன் தெளிவாக கற்றுக் கொண்டுவிட்டால். உலக மொழிகள் அனைத்தையும் எளிமையாக கற்று விடலாம். காரணம் உலக மொழிகளின் அகரவரிசை எழுத்துக்களின் வடிவம் மற்றும் உச்சரிப்பு மட்டுமே வேறுபடும் ஆனால் அகரவரிசை(Alphabets ) எழுத்துக்களுக்கான பொருள் ஒன்றே ஆகும். இதனைத்தான் 14 மொழிகள் கற்றறிந்த பாரதி செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனில் சிந்தனையில் ஒன்றுடையாள் என்ற கருத்தினை முன் வைத்தார்.

    இன்று உலக அளவில் பயன்பாட்டில் உள்ள மொழிகள் அனைத்துமே தனது அகரவரிசை ( Alphabets ) எழுத்துக்களுக்கான பொருள் அதாவது எழுத்திற்க்கான உருவம் (மெய்)உண்டு, பொருள்( உயிர் ) இல்லை. இதுவே இன்றைய மொழி பிரச்சினை, மொழி பகிஷ்கரிப்பு ,மொழி விற்பனை,உயர்ந்த மொழி, தாழ்ந்த மொழி போன்ற எண்ணற்ற கருத்து திணிப்பு செயல்களுக்கான அடிப்படை காரணம் ஆகும்.

    ஒரு மொழியின்அகரவரிசை எழுத்துக்களுக்கான பொருளினை கற்றுக் கெடுக்காமல் மொழியின் இலக்கண வளம், இலக்கிய வளம் இருந்து என்ன பயன்?
    * உயிர் எழுத்துக்கள் : அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ
    * மெய் எழுத்துகள் :
    க்,ங், ச், ஞ், ட்,ண், த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ், ள், ற்,ன்
    * ஆயுத எழுத்து :

    # இது வரைக்கும் தமிழ் மொழியினை ஒன்றாம் வகுப்பு முதல் முனைவர் கல்வி வரை கற்று இருப்பீர்கள் எங்காவது தமிழ் மொழியின் அகரவரிசை எழுத்துக்களுக்கான பொருளினை அறிந்து இருக்கிறீர்களா?

    #அப்படியானால் ஏன் இது நாள் வரையில் அது பற்றி எங்குமே கேள்வி கூட பட்டதில்லை ஏன்?

    # தமிழ் மொழியின் அகரவரிசை எழுத்துக்களுக்கான பொருளினை மறைப்பதில் யாருக்கு என்ன லாபம்?

    ;# தமிழ் மொழியின் அகரவரிசை எழுத்துக்களுக்கான பொருளினை பற்றி கற்றுக் கெடுக்காமல் அந்த மொழியியல் படைப்பாற்றல் கல்வியினை இவ்வாறு உருவாகும்?

    இத்தகைய கல்வி முறை வானவில்லின் ஒவ்வொரு வர்ணங்களை பற்றி கூறாமல் வானவில்லினை பற்றி விமர்சனம் செய்வதற்கு ஒப்பான தவறான கல்வி முறையாகும்.
    என்று நமது கல்வி முறை அகரவரிசை(Alphabets ) எழுத்துக்களுக்கான பொருளுடன் கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாட்டிற்கு முன்வருகின்றனவே அன்றே மொழி குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும்.

    உலகம் அமைதி பெரும், அரசியல், பொருளாதரம்,சமூகம்,சமயம், கல்வி, புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி போன்றவற்றிற்க்கு வழிவகை செய்து அனைத்துமே நீடித்த நிலைத்த மேம்பாட்டினை அடையும்.

    மேற்கண்ட கருத்துக்களை மெய்ப்பிக்கும் வண்ணம் தொடர்புடைய ஆய்வு அறிக்கை என்னிடம் உள்ளது. உரிய நேரத்தில் புதிய கல்வி கொள்கையின் மூலம் வெளிவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!