சென்னை புழல் மத்திய சிறை வேலைவாய்ப்பு 2021 | ஊதியம்: ரூ.50400/-
சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை-1ல் காலியாக உள்ள சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முன் கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் தேர்வு செயல் முறை ஆகிய விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சென்னை மாவட்டம் புழல் மத்திய சிறை |
பணியின் பெயர் | சமையலர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 28.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மத்திய சிறை காலிப்பணியிடங்கள்:
- சமையலர் – 01
- ஆற்றுப்படுத்துநர் – 01
வயது வரம்பு:
(அதிகப்பட்சமாக) எஸ்.சி./எஸ்.சி.ஏ-35, எஸ்.டி- 35, பிற்படுத்தப்பட்டோர் -32, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 32, ஓ.சி-30 இருத்தல் வேண்டும்.
சென்னை மாவட்ட பணிகளுக்கான கல்வி தகுதி:
சமையலர் (Cook):
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சமையல் பணியில் இரண்டு வருடங்கள் குறையாமல் முன்அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆற்றுப்படுத்துநர்(Counsellor):
Master Degree in Sociology/Psychology/Social Work Technical Counsel Experience in Mental Health institutions of Community Service முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
- சமையலர் – ரூ.15900-50400/-
- ஆற்றுப்படுத்துநர் – ரூ.19500/-என்ற ஊதியம் தொகுப்பூதிய அடிப்படையில் வழங்கப்படும்.
மத்திய சிறை பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் 28.01.2021ஆம் தேதிக்குள் சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை-1, (தண்டனை) புழல், சென்னை- 66 தொலைபேசி எண்.044-26590615 26590615 26590615 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும். 28.01.2021 மாலை 5.00 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
Chennai